பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட் இன்னும் தனக்கே கிடைக்கவில்லை என்று சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன்:
மறைந்த எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரு பாகங்களாக மணிரத்னம் எடுத்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் தஞ்சையின் பெருமையை சொல்லும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அது மட்டுமின்றி படக்குழுவினர் படத்தின் விளம்பரத்திற்காக முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
வார்த்தைகளை பார்த்து பேசுங்க – பொன்னியின் செல்வன் புரொமோஷனில் விபரீதம்! கொந்தளித்த ரசிகர்கள்!!
அதாவது அவர் கூறியிருப்பதாவது, நற்பொழுதாகுக….நாளை திரையில் வருமுன்.., இன்று இன்ஸ்டா பக்கத்தில் சரியாக மாலை 3 மணியளவில் நேரலையில் வருகிறேன்!! என்றும் பின் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு எனக்கே இன்னும் டிக்கெட் கிடைக்கல!! என தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் படத்தில் நடித்தவருக்கே டிக்கெட் இல்லையா? என்று ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.
நற்பொழுதாகுக….
நாளை திரையில் வருமுன்
இன்று நேரலையில்(insta)
3pm வருகிறேன்!பி.கு: பொ.செ-க்கு எனக்கே இன்னும் டிக்கட்டு(திக்கெட்டும் இஃதே) கிடைக்கல!! pic.twitter.com/7q44WBhO9g
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 29, 2022