சேலம் ஆவின் மையத்தில் தேங்கியுள்ள 18000 டன் பால் பவுடர் பொருட்களை அதன் காலாவதி தேதி முடிவடைவதற்குள் பொங்கல் பரிசு திட்டத்துடன் கொடுத்து விடுமாறு பால் உற்பத்தியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா நோய் பரவல்:
கொரோனா நோய்ப்பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு முறை பின்பற்றப்படுகிறது. இதனால் பெரும் பொருளாதாரச்சரிவு உலகெங்கிலும் ஏற்பட்டுள்ளது. வர்த்தக பொருட்கள் அனைத்தும் தேங்கியுள்ள நிலையில் உள்ளது. இதனால் வியாபாரிகள் பலத்த நஷ்டத்தை அடைந்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோன ஊரடங்கு காலத்தில் ஒரு நாளைக்கு மட்டும் 28 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 36 லட்சம் பாலை நாள் ஒன்றுக்கு கொள் முதல் செய்கிறது. மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் பலவற்றையும் ஆவின் நிறுவனம் தற்போது விதித்து அதன்படி தான் பாலை கொள்முதல் செய்கிறது. அப்படி புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி பாலை வாங்கக் கூடாது எனவும், தாங்கள் வழங்கும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனம் வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் உற்பத்தியாளர்கள் சங்கம்:
மேலும் ஆவின் நிறுவனத்தில் மாநில அளவில் 50 லட்சம் லிட்டர் பால் கையாளும் அளவில் மேம்படுத்த வேண்டும் எனவும், சத்துணவு திட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ஆவின் நிறுவனத்தில் 10,000டன் பால் பவுடர் தேக்க நிலையில் உள்ளது. மேலும் பாலை பால் பவுடராக மாற்றம் செய்யும் போது உறுப்பினர்கள் வழங்கும் பால் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும் கொரோனா நிதியிலிருந்து வழங்குவதன் மூலம், உறுப்பினர்கள் பணம் பாக்கி இல்லாமல் பட்டுவாடா செய்யப்படும்.
மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!
மேலும் தேங்கியுள்ள பால் பவுடரை காலாவதி தேதி முடிவடைவதற்குள் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு வழங்கினால் அவை வீணாவதை தடுக்க முடியும். மதுரை ஆவின் சார்பில் 9 மாவட்டங்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுடன் ஆவின் நெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.