வருகின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கலின் போது வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகளுக்காக முதல் தவணை நிதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு:
தமிழகத்தில் தமிழரின் திருவிழாவான பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதோடு சேர்த்து, பொங்கல் தொகுப்பு சாமான்களும், ஒரு துண்டு கரும்பும், ஒரு குறிப்பிட்ட அளவு பணமும் வழங்கி சிறப்பிக்கப்படும். இதற்காக தமிழக அரசால் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இதில் வேட்டி மற்றும் சேலைகளுக்கு என்று குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இது சார்ந்த ஒப்பந்தங்கள் கைத்தறி ஆடை அமைப்புகளுடன் நடைபெறும். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் பங்கு மிகப் பெரிய அளவினதாக இருக்கும். இந்த நிலையில், வருகிற 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகளுக்கான முதல் தவணை நிதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, இன்று நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்த முக்கிய அறிவிப்பு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக வெளியிடப்பட்டது. அவர்கள் தெரிவித்ததாவது, இந்த திட்டத்திற்கு என்று முதல் தவணையாக 157.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இது சார்ந்த பணிகள் முடுக்கி விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்