தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசின் புதிய திட்டம் - அதிரடி விசிட் கொடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள்!!

வரும் செப்டம்பர் 1 முதல் புதுச்சேரியில் சுழற்சி முறையில் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் சென்ற ஆண்டு முதல் அதிகரித்த கொரோனா தொற்றால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

பின்னர் தற்போது இரண்டாம் அலையின் தொற்று குறைந்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சில நாட்களுக்கு முன் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here