சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த சட்டசபை கூட்டத்தில், எம்எல்ஏக்களால் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதில் அளித்துள்ளார். அதில், குறிப்பாக கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதற்கு அமைச்சர், கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கான வரைவு ஒப்புதல் கிடைத்தவுடன், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இந்த திட்டம் உப்பளம் மற்றும் பிள்ளைச்சாவடி பகுதியில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த திட்டமானது செயல் முறைக்கு வரும் வரை, நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள சிவப்பு மண்டல பகுதிகளுக்கு மட்டும் சலுகை ஒன்று வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதாவது, சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு, இலவசமாக ஒரு நாளைக்கு, ஒரு குடிநீர் கேன் வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும், நிலத்தடி நீரை சேமிப்பதற்கான அமைப்புகளை, வைத்திராத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பதற்காக பேச்சு வார்த்தைகள் நிலுவையில் உள்ளன. இதனால், விரைவில் நிலத்தடி நீரை சேமிக்கும் அமைப்பை ஒவ்வொரு வீடுகளிலும் அமைத்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.