தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு ரஜினிகாந்திற்கு தலைவர்கள் வாழ்த்து – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகரான ரஜினிகாந்திற்கு தற்போது தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததை அடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.

தாதா சாகேப் பால்கே விருது

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். தொடர்ந்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்கள் மத்தியில் நிலைத்து நின்றவர். அவரது படையப்பா, பாட்ஷா போன்ற திரைப்படங்கள் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்தவை ஆகும். இதுவரையிலும் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்துள்ளார். அதனாலேயே இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு திடிரென ஏற்பட்ட உடல்நல குறைவால் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது என்றே சொல்லலாம். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் பழனிசாமி அவருக்கு கால் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரதமர் மோடி அவர்களும் ட்விட்டரில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தனது நண்பருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். துணை முதல்வர் பன்னீர் செல்வமும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here