உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் பயங்கரம்..!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில்தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபே இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு தேடி சென்றுள்ளனர்.
அப்போது போலீசார் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது ரவுடிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 காவலர்களை ரவுடி கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது. மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில டிஜிபி எச்.சி அவஸ்தியிடம் உடனடியாக அறிக்கை தாக்கல் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் உத்தரபிரதேச மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.