சாகும் முன் மனைவியையும் சேர்த்து கொன்ற கணவன் – “புருஷன் பொண்டாடின இப்படில இருக்கணும்”

0

செந்தில்குமார் என்பவர்  சுகர் அதிகரித்ததால் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

மனைவியையும் சேர்த்து கொன்ற கணவன்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நீண்ட காலமாக செந்தில் குமாருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. இதற்காக பல ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டுள்ளார். சுகர் அதிக அளவில் சென்றதால்,மேலும், மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா வந்துவிடும் எனவும், இறந்து விடுவோம் என்ற பயத்திலும் செந்தில்குமார் இருந்துள்ளார்.

ஏற்கனவே பயத்தில் இருக்கும் செந்தில் குமாரை மருத்துவமனை சென்று மருத்துவர்களிடத்தில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சங்கீதா வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலேயே அலறி துடித்தபடி பரிதாபமாக இறந்தார்.

சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகன்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததால், செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது தனக்கு ரத்த அழுத்தம், சுகர் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்திலும் தனக்கு பிறகு மனைவி சங்கீதா தனியாக வாழக் கூடாது என்ற எண்ணத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். சுகர் அதிகரித்த காரணத்தினால்,கணவரே மனைவியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here