தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோர் மீது உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்வேந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிரடி புகார்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவரும், பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜியும் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்திருந்தனர். இதற்கு எதிராக கண்டன குரல்கள் வலுத்திருந்த நிலையில், விளம்பரங்களில் நடிப்பது தங்களின் தனிப்பட்ட உரிமை என சரத்குமார் தெரிவித்து இருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது மீண்டும் பூதாகரமெடுத்துள்ள இந்த பிரச்சனையில், சரத் மற்றும் பிரேம்ஜி மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்வேந்தன் போலீஸ் புகார் அளித்துள்ளார். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால்பல குடும்பங்கள் சீரழிந்து உள்ளதாகவும், இதற்கு இவர்களின் விளம்பரம் ஒரு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சரத்குமார் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்லாமல், முன்னாள் எம்எல்ஏவும் கூட, அவர் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை ஏற்க முடியாது.
பங்களாதேஷிற்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்…, இவருக்கு பதில் இவர் தான்?? வெளியான தகவல்!!
அதேபோல் நடிகர் பிரேம்ஜியும் பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர். இவர்கள் நடித்த இந்த விளம்பரத்தால் பல குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், இவர்கள் நடித்த ரம்மி விளம்பர படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.