கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். தற்போது அந்த நபர் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
குற்றவாளி பிடிபட்டார்:
சென்னையில் உள்ள நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முழுமையான சோதனை செய்தனர். அதன் பின்னர் அழைப்பு ஒரு மோசடி என்பதைக் கண்டுபிடித்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கூட அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த நபரை போலீசார் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் அந்த மர்ம நபரை கண்டுபிடித்தார்கள்.
மேலும் அந்த நபர் மனநிலையற்ற சிறுவன் என்று அடையாளம் கண்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. சென்னை அருகே மரக்கனத்தில் வசிக்கும் மனநிலையற்ற தினேஷ் என்ற நபரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக தெரிகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!