குஜராத்தின் கக்ரபார் அணு மின் நிலையம் மின் உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்திருக்கிறது , இதற்கு அணு விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்தினார்.
கக்ரபார் ஆலை:
குஜராத்தில் உள்ள கக்ரபார் ஆலை மின் உற்பத்தி செய்யும் ஒரு ஆலை ஆகும். அந்த ஆலையில் தற்போது மின்சாரம் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வந்தனர். இது உள்நாட்டியில் அமைக்க பட்ட மூன்றாவது அணு மின் நிலையம் ஆகும். இந்த முயற்சிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மின் உற்பத்தி:
குஜராத்தில் உள்ள 700 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் இயல்பான இயக்க நிலையை அடைந்து உள்ளது.ஆலை இப்போது மின்சாரம் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் எம்.எல்.ஏ -விற்கு கொரோனா தொற்று..!
இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் “காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில், அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஔிரும் உதாரணமாகத் திகழ்கிறது. இது, வருங்காலத்தில் இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஒரு வழிகாட்டுதலாக விளங்கும்” இது ‘மேக் இன் இந்தியா’ -விற்கு பிரகாசமான எடுத்துக்காட்டு என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்