ராணுவ வீரர்களின் தியாகத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது – மோடி புகழாரம்..!

1

ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. மேலும் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோடி புகழாரம்..!

காஷ்மீர் மாநிலம் லடாக்கின் லே எனும் பகுதியில் அமைந்துள்ள நிமு முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது என்றும் இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.

நீங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது உங்கள் வீரம் .நாட்டின் பாதுகாப்பு ராணுவ வீரர்களான உங்கள் கைகளில் தான் உள்ளது.இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான். ராணுவ வீரர்களின் வீரத்தால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது.

ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்..!

மேலும் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. வீர மரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. நாட்டின் பாதுகாப்பு ராணுவ வீரர்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. கல்வானின் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம். லடாக் முதல் கார்கில் வரை இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு பல உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் எதிரிகளுக்கு நமது ராணுவம் தக்க பாடம் புகட்டியுள்ளது.

இதையடுத்து தாய்நாட்டை காப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயார். நமது எதிரிகளின் கோழைத்தனமான திட்டங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது. பாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன் நமது ராணுவ வீரர்கள் எல்லையை காத்து நிற்கிறார்கள். கால்வன் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நமது வீரம் சிறப்புமிக்கது..!

நமது வீரம் வழிவழியாக வந்த வரலாற்றுச் சிறப்புமிக்கது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத்தியுள்ளது. சியாச்சின் முதல் கால்வன் வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை உலகம் அறியும். வீரம் என்பது அமைதியை நோக்கிச் செல்வது.

அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப் போவதில்லை. நாடு பிடிக்கும் கொள்கைக்கு ஒட்டு மொத்த உலகமே எதிராக உள்ளது என்றும் ஒவ்வொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறினார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here