ஜனாதிபதி விருது பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது முகம் பொலிவாக இருப்பதன் காரணத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலை, கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்பு, சமூக சேவை, விளையாட்டு, வீர சாகசம் போன்ற பிரிவுகளில் 5 முதல் 18 வயதுடைய 49 மாணவர்களுக்கு நேற்று (ஜனவரி 23) பால சக்தி புரஸ்கர் விருது வழங்கினார். அம்மாணவர்களை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்து பேசிய மோடி,
சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சிலர், உங்கள் முகம் எப்படி பொலிவாக காட்சியளிக்கிறது எனக் கேட்டனர். நான் கடினமாக உழைப்பதால் அதிகமான வியர்வை வெளிவரும்; அதைக்கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால், என் முகம் பொலிவு பெற்றது என எளிமையான பதிலைக் கூறினேன்.
விருதுகள் ஊக்கமாகவும், எதிர்காலத்தில் இன்னும் நல்ல செயல்களை செய்யவும் நிச்சயம் தூண்டியிருக்கும். கடினமான சூழ்நிலைகளை எதிர்த்து போராட நீங்கள் (மாணவர்கள்) தைரியம் காட்டியுள்ளீர்கள். உங்களுடன் பேசும்போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |