பிரதமரின் டிஜிட்டல் நல்வாழ்வு என்கிற புரட்சிகர திட்டத்தை நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 27 ம் தேதி நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
டிஜிட்டல் நல்வாழ்வு திட்டம்:
அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவு, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள பிரதமரின் டிஜிட்டல் நல்வாழ்வு திட்டம் நாட்டின் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட உள்ளதாக பிரதமர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புரட்சிகரமான திட்டத்தை நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 27 ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், தர படக்கூடிய அட்டையில் ஆதார் மற்றும் மொபைல் எண் இணைக்கப்பட்டு தனிப்பட்ட நபரின் மருத்துவம் மற்றும் உடல்நலம் சார்ந்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நலவாழ்வு அடையாள அட்டை, மருத்துவர்கள் பதிவு, மருத்துவமனை பதிவு உள்ளிட்ட மூன்று சிறப்பம்சங்களுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்