கொரோனா மூன்றாம் அலை: பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை.. முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு!!

0

பிரதமர் மோடி தலைமையில் கொரோனா சூழல் குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பாக்கப்டுகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் மூன்றாம் அலையின் பரவலை தடுக்க மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் நாட்டின் கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா மூன்றாம் அலை வந்தால் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசித்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும். மேலும் விமான போக்குவரத்து அமைச்சகம், சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் செயல்படுத்திய பணிகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பிரதமர் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை பற்றி பேச்சுவார்த்தை நடக்கும் என தகவல்கள் வெளியாகுவதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here