செப்.23 அன்று 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!!

0
PM Modi
PM Modi

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (செப்.23) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேச, தமிழக முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமர் மோடி ஆலோசனை:

இந்தியாவில் இதுவரை 5,487,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 87,909 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பிற நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ள நிலையில், இங்கு நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா மாறும் என ஹைதெராபாத் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

PM Modi conference

இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில வாரங்களாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருவதால் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நாட்டின் செயலில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளில் சுமார் 60 சதவீதம் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ளன.

நவம்பர் வரை இலவச அரிசி, நகர்ப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் – தமிழக அரசுக்கு பரிந்துரை!!

இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை மறுநாள் (செப்.23) வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக ஆகஸ்ட் 11 அன்று ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  செப்.30ம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here