தமிழக சட்டமன்ற தேர்தல் – பரப்புரைக்காக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை!!

0

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மோடி தமிழகம் வருகை

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவுபெற்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அரசியல்வாதிகள் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை அறிவித்தும் வித்தியாசமான வாக்குறுதிகளை கொடுத்தும் மக்களை கவர்ந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த முக்கிய தகவல் வெளியீடு – தலைமை அதிகாரிகள் அறிவிப்பு!!

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக சார்பாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். முன்னதாக கடந்த மார்ச் 1ஆம் தேதி தமிழகம் வந்த மோடி அரசு விழாக்களில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார். இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 30ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டுமாக தமிழகம் வரவுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here