உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும் எனவும் கொரோனா மூன்றாம் அலையை விரைவாக தடுக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலகெங்கிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இந்த தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். மாநில அரசுகள் பிறப்பித்த தீவிர ஊரடங்கால் தொற்று பரவல் குறைந்தது. தற்போது இந்தியாவில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என தகவல்கள் வெளியாகியது.
கொரோனா இரண்டாவது அலையே இன்னும் முடிவுக்கு வரவில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உட்பட ஆறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூலை 16,2021) 11 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டத்தை தொடங்கினார். அதில் உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும் எனவே மூன்றாம் அலையாய் வேகமாக தடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்