மத்திய அரசு வாங்க கூடிய கொரோனா நிவாரண நிதியான பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி அனைத்தும் முழுக்க முழுக்க மக்களின் தேவைகளுக்கான பணமே தவிர மத்திய அரசின் பணம் இல்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
பிஎம் கேர்ஸ் மக்களின் பணம்:
இந்தியா முழுக்க பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது இந்த கொரோனா தொற்று. இவர்களில் பலர் தங்களின் ஒரு வேலை உணவை கூட உண்ண முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, இது போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள் கொடுப்பதற்காக மத்திய அரசின் சார்பாக பிஎம் கேர்ஸ் நிவாரண திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம், வசதி படைத்தவர்கள் இல்லாத மக்களுக்கு கொடுத்து உதவுவதற்காக இந்த அமைப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த நிவாரண நிதி முறையாக பயன்படுத்த வில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு, இந்த பணம் ஒன்றும் மத்திய அரசின் பணம் அல்ல. இது மக்களின் பணம் தான், மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமே இந்த பணம் செலவு செய்யப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்