பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தேர்வுத்துறை..!

0

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமே மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது என்பது பற்றி தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியான 6 நாட்களுக்கு பிறகு அதுகுறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி, விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

மேலும் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. எனவே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here