தமிழகத்தில் பன்னிரண்டாம் பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.நேற்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நேற்று மாலை, பிரதமர் நரேந்திர மோடி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பது காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசின் முடிவுக்கு பின்னரே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் முடிவை தொடர்ந்து தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
முதல்வர் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!