மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு எந்த தடையும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இடஒதிக்கீடு:
மருத்தவ படிப்புகளுக்கு ஓபிசி பிரிவினருக்கு 50 % மட்டுமே இட ஒதிக்கீட்டை வழங்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகள் வாதாடி வந்தன. அவர்கள் அதில் கூறியது, தமிழகத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக உள்ளனர். அதனால், அவர்களுக்கு 50 % இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக வைத்து வந்தனர். இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை அளித்தனர். இந்த மனுவிற்கு பதில் அளித்த மத்திய அரசு அந்தந்த மாநிலங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு இடங்களை வழங்கலாம் என்றும் அது 50 % க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு திட்டம்!!
இதில் தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி “தமிழக அரசு 69 %இட ஒதிக்கீடு வழங்கும் போது மத்திய அரசு எப்படி அதனை 27 % என்று கூற முடியும்” என்று சுட்டிக்காட்டினார். மேலும், பட்டியலின பழங்குடியினர்க்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதிக்கீட்டை வழங்காமல் இருப்பது சட்ட விரோதமானது” என்றும் சுட்டிகாட்டினார்.
நீதிபதிகள் பதில்:
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் ” ஏற்கனவே உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் இட ஒதிக்கீட்டை தான் பின்பற்றவேண்டும் என்ற தீர்ப்பை ஏன் மத்திய அரசு பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பியது. பின்பு, இன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள் மத்திய அரசு 50 % இட ஒதிக்கீட்டை தர சட்டம் இயற்றலாம் என்று கூறியுள்ளது.
மேலும், இது 30 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு , இதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. இதில் அடுத்து உச்சநீதி மன்றம் தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்து உள்ளனர்.