பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கச்சா எண்ணையின் விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்து மிகவும் குறைய ஆரம்பித்தது. இவ்வாறு கச்சா எண்ணெய் விலை குறைந்த பொழுதும் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டு தான் உள்ளது.
அதுவும் இந்தியாவின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ஐ தாண்டி விட்டது. இதனால் கடும் சிரமத்திற்கு வாகன ஓட்டிகள் உள்ளாகினர். ஆனால் தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கலின் பொழுது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
இருப்பினும் அதிகரித்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் திணறி கொண்டு தான் உள்ளனர். இந்நிலையில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்