ஊரடங்கு காலத்திலும் தீயாக உயரும் பெட்ரோல், டீசல் விலை..இன்றைய நிலவரம் என்ன???

0

சென்னையில் இன்று (29.05.2021) பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து, 95.51 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 26 உயர்ந்து, 89.65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாடு முழுவதும் தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களின் வாகன பயன்பாடு குறைந்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ள போதிலும் இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயன்பாடு குறைந்துள்ள நிலையிலும், உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் கட்டணத்தை குறைக்கவில்லை.

 

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில், 40,00,000 பேரல் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அது மே மாதம் 7,30,000 பேரலாக குறைந்துள்ளது.

இவ்வாறு பயன்பாடு குறைந்தாலும் இதனுடைய விலை நாள்தோறும் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. அதன்படி இன்றைய நாளில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 95.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.65 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here