சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரு மாதத்தில் 6 டாலர் வரை உயர்ந்து விட்டதால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை மேலும் உயரும் என்ற அபாயம் நிலவி வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இது தமிழக மக்களுக்கு சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்தியாவில் கடந்த சில முன்னர் உயரிய பெட்ரோல், டீசல் விலை தற்போது வரை குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படால் சிறிது விலை மாற்றம் ஏற்படும் என்று இருந்த வேளையில், நேற்று நடைபெற்ற 45வது ஜி.எஸ்.டி. கூட்டத்தின் முடிவில் பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்நிலையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சர்வதேச சந்தையில் ஒரே மாதத்தில் 6 டாலர் வரை அதிகரிக்கப்பட்டு விட்டதால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை மேலும் உயரும் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஏற்கனவே கவலையில் இருந்த வாகன ஓட்டிகளுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்