இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:
நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயித்து வருகின்றனர். தற்போது கச்சா எண்ணெய் 61 டாலராக உயர்ந்துள்ளதால், இந்த தாக்கத்தை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது சில மாநிலங்களில் பெட்ரோல் தனது விலையில் சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் சில மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரையை குறைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.92.59 ஆகவும் மற்றும் டீசல் லிட்டர் ரூ.85.98 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
முதன்முதலாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன் – இணையத்தில் வைரல்!!
தற்போது இன்றைய நிலவரப்படி நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.92.90 ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.86.31 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தற்போது மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.