பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், லிட்டருக்கு 30 லிருந்து 35 வரை விலை குறைவு ஏற்படும் என பாஜகவை சேர்ந்த அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விலை குறையும்:
மாநிலங்களில் பல இடங்களில் சதமடித்து அதையும் தாண்டி விற்பனையாகி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் எப்போது விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் நடந்த 24 வது ஜிஎஸ்டி கவுன்சில் மாநாட்டில் இந்த எரிபொருட்களை ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை இந்த நடைமுறைக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 லிருந்து 35 ரூபாய் வரை குறையும் என்றும், அண்மையில் பதவி ஏற்ற ஸ்டாலின் அரசும் இந்த உறுதிமொழியை தெரிவித்ததாகவும் அறிவித்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்