ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கும் இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இதில் அதிகளவு பணத்தை இழந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சீன செயலிகளை தடை செய்தது போன்று இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
மதுவுக்கு பதிலாக சானிடைசர் குடித்த 10 பேர் பலி – ஆந்திராவில் சோகம்!!
வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இது குறித்த விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் என தெரிவித்து உள்ளனர்.