மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ் விவகாரம் – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

0

முக்கிய தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட பெகாசஸ் விவகாரத்தில் பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டுள்ளது.

கால அவகாசம்:

இஸ்ரேல் நாட்டின்  என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள்,மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் தெரிவித்து இருந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி  அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது.


மேலும், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் பேசப்பட்டு நாளும் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு வந்தது.  இதனால், மிக விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது.  இருந்தாலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோர் அளித்த 12 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த விவகாரம் நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


இந்த நிலையில்,  இதற்கான விரிவான பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்ற நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, இதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  இதை மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஏற்றுக் கொண்டார்.  இதனை அடுத்து இந்த வழக்கை செப்டம்பர் 13 ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here