தமிழகத்தில் நேற்று 20,421 பேருக்குக் கொரோன தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது குறைந்து இன்று 19,448ஆக உள்ளது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7 வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 36000 என்ற அளவில் பதிவானது. தற்போது தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (ஜூன் 07) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் இன்று புதிதாக 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 463 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 31,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,32,026 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1,60,385 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!