பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு நபருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாலியல் வன்கொடுமை:
இன்றைய டிஜிட்டல் உலகில் கொலை, கொள்ளை, கடத்தல், திருடுதல், பாலியல் போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல சட்டங்களை கொண்டு வந்தாலும், இந்த குற்றங்கள் முடிந்த பாடுஇல்லை. இதை தொடர்ந்து சிறு குழந்தைகள் என்று கூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர். இதனால் சில குழந்தைகள் இறந்து போகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நவாடா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு நபர் கோழி பண்ணை தொழில் செய்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதே பகுதியில் இருக்கும் 5 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அந்த நபர் கோழிப்பண்ணைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த நிகழ்வை நேரில் பார்த்த சிலர் அவரை குண்டு கட்டாக தூக்கி பஞ்சாயத்தில் நிற்க வைத்தனர். அதன் பின்னர் அவர் செய்த தவறு உறுதியான நிலையில், மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.
அந்த வகையில் அந்த நபருக்கு 5 தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை கொடுத்து தீர்பளித்துள்ளனர். இந்த தண்டனையை ஏற்று அவரும் 5 தோப்புக்கரணம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த தண்டனையை கேட்ட மற்ற நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பாலியல் அதிகரிக்கும் நிலையில், இது மாதிரியான தண்டனைகள் கொடுத்தால் எப்படி குற்றம் குறையும் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.