சிக்கன் என்றால் இன்று பெரியவர் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். இந்த மழை காலத்திற்கு தகுந்தாற் போல் ஒரு சூப்பர் ஆன சிக்கன் ரெஸிபி இதோ..
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 500 கிராம்
- மிளகு – 25 கிராம்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி – 10 கிராம்
- பூண்டு – 10 கிராம்
- வெங்காயம் – 100 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்யும் முறை:
- முதலில், சிக்கனை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
- பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- பூண்டு, மிளகு, இஞ்சி மற்றும் சோம்பு இவை அனைத்தையும் நன்றாக விழுது போல் மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.
- இப்பொழுது, வானொலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி இந்த விதையும் வெங்காயத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
- பின்பு, சிக்கனை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து கிண்ட வேண்டும். கிண்டியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடிவிடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலவையை ஒரு 15 நிமிடம் வரை வைக்கவும்.
- தண்ணீர் கொதித்து, சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
ஸ்பைசியான பெப்பர் சிக்கன் ரெடி..!!