ஷூட்டிங்கில் நயன்தாராவை சுற்றி வளைத்த ரசிகர்கள் – பொது இடத்தில் பரபரப்பு!!

0

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ஷூட்டிங்காக தாம்பரம் சானடோரியம் சாலையில் நடித்த போது அவரது ரசிகர்கள் பலரும் நயன்தாராவை பார்க்க கூடியதால் அந்த இடமே பரபரப்பாகியுள்ளது.

நயன்தாரா

தமிழ் திரையுலகில் நயன்தாராவிற்கு பல ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் லேடி சூப்பர் ஸ்டாராகவே மக்கள் மத்தியில் வலம் வருகிறார். இத்தனை வருட போராட்டத்திற்கு பிறகு திரையுலகில் நிலையான இடத்தை பிடித்த அவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது அவர் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஓடிடியில் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

25 கோடிக்கு மேல் வசூலையும் பெற்றது. நவம்பர் மாதம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியானது. இதுவரையிலும் இல்லாத விதமாக மாறுபட்ட கதையம்சத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. கண் தெரியாமல் எதிரிகளை வீழ்த்தும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த டீசரை பார்க்கும்போதே மிரட்டும் விதமாக தான் இருந்தது. இது நயன்தாராவின் கேரியரையே தூக்கி நிறுத்தும் படமாக இருக்க அதிக உள்ளது. நயன்தாரா தற்போது தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதில் சமந்தாவும் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தன.

சில நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி ரோடில் நடந்தது. இதனால் நயன்தாராவை காண அவரது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. போலீசார் அவர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here