மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் – மாநகராட்சி அதிரடி!

0
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - மாநகராட்சி அதிரடி!
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - மாநகராட்சி அதிரடி!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வாரங்களில் கொரோனா அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி,திருச்சி,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வந்த நிலையில் கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

இந்நிலையில் சென்னையிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனை தடுக்கும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதாவது மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களான தியேட்டர், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here