முக்கிய தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட பெகாசஸ் விவகாரத்தில் நிபுணர் குழுவை அமைத்து அடுத்த கட்ட விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தயாராகி விட்டதாக தகவல் வந்துள்ளது.
நிபுணர் குழு:
முக்கிய தலைவர்கள் செல்போன் பேச்சுக்களை இஸ்ரேல் நாட்டின் தனியார் அமைப்பான பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் மத்திய அரசு ஓட்டு கேட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணைக்கு உரிய பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தங்களால் தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது.
இதில், தங்களின் முடிவை அரசு மாற்றி கொள்ள வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில், இது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை துவக்கி விட்டது. அதாவது, இது குறித்த விசாரணைக்காக நிபுணர் குழுவை நியமிக்க நீதிபதிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும், இது குறித்த முக்கிய உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்