முக்கிய தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட பெகாசஸ் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரிய மத்திய அரசு தற்போது அதை தாக்கல் செய்ய முடியாது என மறுத்து விட்டது.
மறுத்த மத்திய அரசு:
முக்கிய தலைவர்களின் செல்போன் பேச்சுக்களை இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் மத்திய அரசு ஓட்டு கேட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்த விளக்கம் கேட்கப்பட்ட போது மத்திய அரசு சார்பில் தகுந்த விளக்கம் அளிக்கப்படவில்லை. இது குறித்த பிரச்சினைகள் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளால் எழுப்ப பட்ட போதும் மத்திய அரசு மவுனம் காத்து வந்தது.
இதனால், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு முடிய வேண்டிய நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோர் அளித்த 12 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு அரசு சார்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதி அமர்வு கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் எழுப்பிய பிரமாண பத்திரம் தாக்கல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் தேசிய பாதுகாப்பு நலன் அனைத்தும் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளதால், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என தெரிவித்தார். இதனால் கோபமடைந்த நீதிபதி மத்திய அரசின் இந்த முடிவை ஏற்க முடியாது எனவும், நீதிமன்றம் வழங்க கூடிய இடைக்கால தீர்ப்புக்குள் அரசு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டால் இங்கே தெரிவிக்கலாம் என கூறி மூன்று நாட்கள் வழக்கை ஒத்திவைத்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்