ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தரவு செய்துள்ளது.
பஞ்சாப் vs ஐதராபாத்:
இந்தியாவில் நடைபெறும் 14வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியின் வெற்றி பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு மிக முக்கியம் என்பதால் இந்த போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பஞ்சாப் அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் அகர்வால் களமிறங்கியுள்ளனர். இருவரும் மிக பொறுமையாக ரன்களை சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் 4, அகர்வால் 22, பூரான் 0, கெய்ல் 15,ஹோடா 13,ஹென்றிக்ஸ் 14,ஷாருக் கான் 22, அல்லேன் 6, முருகன் அஸ்வின் 9, ஷமி 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு – முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!
பஞ்சாப் அணி 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. துவக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கியுள்ளனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன்(16 ரன்கள்) மற்றும் பேர்ஸ்டோ(63 ரன்கள்) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.