பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் நாட்டில் ரசிகர்கள் அனைவரும் பாவனி அமீர் பற்றி தான் பேசி வந்தனர். பாவனி எப்பொழுது அமீரை ஏற்றுக்கொள்வார் என பலர் வாய் விட்டு புலம்பி விட்டனர். அப்படி இருக்கையில் சமீபத்தில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி முடிந்தது. அந்நிகழ்ச்சியில் இறுதி போட்டியில் வென்ற இரு ஜோடிகளின் பாவனி அமீர் ஜோடியும் ஒன்று.
அதன் பின்னர் பாவனி அமீரை குறிப்பிட்டு காதல் மற்றும் கல்யாணம் வரை ஒரு பதிவை இன்ஸ்டா பக்கத்தில் போட்டார். ரசிகர்கள் பலரும் பாவனி அமீரை ஏற்றுக்கொண்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மறுபுறம் இது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிபி ஜோடிகள் TRP பெற்றதற்கு ஒரு காரணமே பாவனி அமீர் தான்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இடை இடையே அமீர் பாவனியிடம் Propose செய்வது போன்ற எபிசோடுகள் ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவை பெற்றது. இதனால் தான் இதை ஒரு துறுப்பாக பயன்படுத்தி கடைசி வரை பாவனி காதலை கூறாமல் தற்போது நிகழ்ச்சி முடிந்த பின் கூறியுள்ளார் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சில பேர் TRP-க்காக இப்படி எல்லாம செய்வாங்க என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.