பிரபல சீரியல் நடிகையான பாவனி இப்பொழுது அமிரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் அவர் குறித்த முக்கிய தகவல் வைரல் ஆகி வருகிறது.
பவானி அமீர்
ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பாவனி. அதன் பிறகு அவருக்கு அடுத்த சீரியலில் அந்த அளவுக்கு பிரபலம் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு சில சீரியல்களில் நடித்து வந்தார். பின் சன் டிவியில் பாசமலர் என்ற சீரியலில் தனது முதல் கணவருடன் இணைந்து நடித்து வந்தார். அந்த சீரியலில் தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களுக்காக அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. பாவனி தான் இதற்கு காரணம் என்ற பழியும் வந்து விழுந்தது. ஆனால் நாளடைவில் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் நிரூபணமானது. அதன் பிறகு தான் சின்னதம்பி சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் நம்ம பாவனி. சீரியல் அவருக்கு எக்கச்சக்க வரவேற்பை கொடுத்தது.
எப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு அதில் சக போட்டியாளராக இருந்த அமீரை காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இப்பொழுது அவர் குறித்த முக்கிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்டாலின் பாசமலர் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாவனி மற்றும் அவரது கணவர் இருவரும் அப்பொழுது இருந்தே ஸ்டாலினுக்கு பழக்கம் தான். அந்த செய்தி இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.