பாட்னாவில் பெண்கள் கல்லூரி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து வர தடை செய்துள்ளது, மேலும் அணிந்து வந்தால் ரூ. 250 அபராதம் விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
பாட்னாவில் ஜே.டி மகளிர் கல்லூரியில் புதிய உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அதன்படி கல்லூரியுனுள் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது எனவும் மீறினால் ரூ. 250 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டினை சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக கடைபுடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய ஆடை கட்டுப்பாடு மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சி என மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது பற்றி கல்லூரி முதல்வர் ஷியாமா ராயிடம் கேட்ட போது, பகுத்தறிவை கொண்டு வரும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், பர்ஹா தடை உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |