‘பத்து தல’ திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து….., காரணம் இது தான்?

0
'பத்து தல' திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து....., காரணம் இது தான்?
'பத்து தல' திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து....., காரணம் இது தான்?

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்திற்கான முதல் காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

முதல் காட்சி ரத்து

நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க, ஒபேலி என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் பின்னணி கொண்ட, ஆக்ஷன் திரில்லர் கதையில் அமைந்த இத்திரைப்படம் இம்மாதம் 30 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

யாரு பெருசுனு அடிச்சு காட்டு….,இணையத்தில் அதிக பலம் வாய்ந்த அணி இது தானாம்?

அந்த வகையில், ‘பத்து தல’ திரைப்படத்தின் முதல் காட்சியான அதிகாலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால், ‘பத்து தல’ திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திரையரங்குகளில் அதிகாலை காட்சிகளின் போது ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here