நடிகர் சிம்பு அடுத்து நடித்து கொண்டிருக்கும் படம் பத்து தல. இந்நிலையில் இந்த படத்தை குறித்து வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அப்படத்தின் இயக்குனர் ஒபேலி.என்.கிருஷ்ணா.
பத்து தல இயக்குனர்:
தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கு மேல் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது தந்தை இயற்றிய காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் வல்லவன், மன்மதன் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. தற்போது இயக்குனர் ஒபேலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தினை குறித்து அதிகமான வதந்திகள் எழுந்த வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் ஒபேலி.என்.கிருஷ்ணா.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, கர்நாடகாவில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சிம்புவிடம் சட்டையை அகற்றி நடிக்க சொன்னதால் படப்பிடிப்பில் இருந்து கிளப்பிவிட்டார் என செய்தி வெளியாகி தீயாய் பரவியது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறியுள்ளதாவது, “தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். சிம்பு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்து கொண்டிருக்கிறார், அவரது நடிப்பை நானும் ரசித்து கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக மக்களும் திரையில் ரசிப்பார்கள்” என கூறியுள்ளார். இதன் மூலம் சிம்பு பற்றி எழும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.
Dear all , Kindly don’t spread rumours. Our #atman @SilambarasanTR_ is giving us more than our expectations. I personally enjoying the moments of his presence . I am sure everyone feels same on screen ..cheers https://t.co/nV4EakJlZf @StudioGreen2 @kegvraja @NehaGnanavel
— Obeli.N.Krishna (@nameis_krishna) August 12, 2022