பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.780 கோடி வசூல் செய்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது.
பதான் திரைப்படம்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகளவில் எக்கச்சக்க வசூல் குவித்துள்ளது. ஆக்ஷன் திரில்லர் வகையாக உருவாகியுள்ள ‘பதான்’ திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் உருவானது. அதாவது, பதான் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றில் நடிகை தீபிகா படுகோன் காவி உடையணிந்து ஆடியதாக சர்ச்சை உருவானது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால், இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்ப்புகள் உருவானது. இந்த எதிர்ப்புகளை தாண்டி கடந்த மாத இறுதியில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
‘காந்தாரா’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம்…,இயக்குனர் கொடுத்த முக்கிய அப்டேட்…,
குறிப்பாக, இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி வசூல் குவித்துள்ளது. தவிர திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.780 கோடி வசூல் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஷாருக்கானின் ‘பதான்’.