தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்கள் கூடிய விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறியிருந்தனர். ஆனால் இவர்களுக்கு இப்போது வரை பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் திமுக அரசும் தேர்தல் வாக்குறுதியில் இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக அறிவித்தனர். ஆனாலும் இப்போது வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இனி இந்த அரசு துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பணியிட ஒதுக்கீடு., ஐகோர்ட் உத்தரவு!!!
இந்த சூழலில் த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ” தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு கூடிய விரைவில் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். மேலும் அவர்களின் குடும்ப சூழல் கருதி அரசு இதை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.