நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஆந்திர மாநிலத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
பகுதி நேர ஊரடங்கு:
நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாள்தோறும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது. தற்போது நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் கடந்த சில நாட்காளாகவே ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது இதன் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 நிர்வாகிகளுக்கு கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அதன்படி தற்போது ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோய்பரவலை குறைக்கும் வகையில் வருகிற மே மாதம் 5ம் தேதி முதல் அடுத்த 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அதன்படி மக்கள் அனைவரும் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.