“பரியேறும் பெருமாள்” பட நடிகர் தீடிர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
"பரியேறும் பெருமாள்" பட நடிகர் தீடிர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் இறந்து விட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள்:

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் ஆண்டுகளிலே ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குனராக நிலைத்து நிற்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக சினிமாவில் அறிமுகமானார் நெல்லை தங்கராஜ். இவர் பெண் வேடமிட்டு தெருக்கூத்து கலைஞராக இருந்து வந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் இவர் வரும் காட்சிகள் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் இல்லாமல் இருக்காது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இப்படத்தில் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து பேசியிருந்தார். குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

ஏன் இப்படி பண்றீங்க.., நானும் மனுசி தான்.., ரசிகர் செய்த காரியத்தால் காண்டான யாஷிகா ஆனந்த்!!

இதனை தொடர்ந்து சமீப காலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 5 மணியளவில் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here