தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்விற்கான அட்டவணையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா நோய் பரவல்:
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கூட திறக்கப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வருகின்றனர். இந்த நிலையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காவது பள்ளிகளை திறந்து நேரடியாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், பள்ளிகளை திறப்பதற்கான எந்த ஒரு சாத்திய கூறுகளும் தற்போது இல்லை என்று தமிழக அரசு தெரிவித்து வருகின்றது. இப்படியான நிலையில், பொது தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். எப்போதும் தமிழக கல்வி துறை முன்கூட்டியே பத்தாம், பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையினை வெளியிடும். ஆனால், இந்த ஆண்டு அது வெளியிடப்படவில்லை.
பெற்றோர்கள் கோரிக்கை:
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது, “மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பொது தேர்வுகள் நடைபெற உள்ளன. பொது தேர்விற்கான அட்டவணையினை முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பதற்கு எதுவாக இருக்கும். அதே போல் எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும், எந்தெந்த பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது போன்ற தகவல்களையும் அரசு மாணவர்களுக்கு விரைவாக வழங்க வேண்டும்”
பாரதியிடம் உண்மையை சொல்ல வரும் வெண்பாவின் சித்தப்பா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!
“அதே போல் தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக பொது தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்குமா அல்லது ஜூன் மாதத்திற்கு தள்ளி போகுமா என்பது போன்ற தகவல்களையும் அரசு வழங்க வேண்டும்” இவ்வாறாக கோரிக்கை விடுத்துள்ளனர்.