கொரோனா வைரசுக்கு பயந்து மூன்று ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் குடும்பத்தினர் சிறை போல் இருந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ்:
கடந்த மூன்று முன்பு ஒட்டுமொத்த உலகத்தையே பீதியில் இருக்க இருக்க வைத்தது தான் கொரோனா வைரஸ். இதனால் ஏகப்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகினர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கானாங்குளத்தங்கரையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, கொரோனா வைரசுக்கு பயந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே தனது மூன்று மகள்களோடு வெளியுலகத்தையே பார்க்காமல் ஒரு சிறைக்கைதி போல் ஒரு தாய் இருந்து வந்துள்ளார்.
அந்த மூன்று மகன்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை மீட்டெடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள். தற்போது அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.