பரமக்குடி அதிமுக எம்எல்ஏ., சதன் பிரபாகரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொரோனா உறுதி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வீரியமடைந்து பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் அமைச்சர்கள் & சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய ப்ரியங்காவுக்கு கெடு – மத்திய அரசு உத்தரவு..!
தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக எம்எல்ஏ.,சதன் பிரபாகரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரத்தில் இதுவரை 952 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.