Tokyo Paralympics: அசத்தும் இந்தியா.. ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை!!

0

பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மணிஷ் நர்வால் தங்க பதக்கத்தையும், சிங்ராஜ் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி நாளை வரை அதாவது செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இந்த பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பில் கலந்துகொண்ட வீரர்கள் அபாரமாக ஆடி அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் 50 மீட்டர்  துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் மணிஷ் நர்வால் தங்க பதக்கத்தையும், சிங்ராஜ் வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்

இதன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களின் 15 ஆக உயர்ந்துள்ளது.பதக்கத்தை கைப்பற்றிய இருவருக்கும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here